இந்த குட்டையில் கல்லை தூக்கி போட்டவர்கள் 2 --ராமேஸ்வரம் கணேசன்
![]() |
பக்திமான் கணேசன் .... பரவசத்தை பாருங்க |
நட்புக்கு வயது தேவை இல்லை.என்னைவிட 15 வயது மூத்தவர். எனது அருப்புகோட்டை நண்பர்கள் குழுவில் பெரியவர். இருபது வயது வித்தியாசமான நண்பர்களுடன் சரி சமமாக அரட்டை முதல் அனைத்து செயல்களுக்கும் ஈடு கொடுத்து கலகலப்பாக கிண்டல் அடித்துக்கொண்டு விளையாடும் விளையாட்டு பிள்ளை. குஷி பேர்வழி .
அருப்புகோட்டை LIC யில் இருவரும் ஒரே நாளில் சேர்ந்தோம்.ஒரே அறையில் தங்கினோம். நான்கு வருடம் கழித்து ஒரே நாளில் காலி செய்தோம்.ஒரே நாளில் பைக் வாங்கினோம் .எட்டு வருடம் கழித்து ஒன்றாக ஒரே நாளில் கார் வாங்கினோம்...எத்தனை ஒற்றுமை.
வளர்ச்சி அதிகாரி வேலையில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் தெரியாத ஊரில் மாட்டிகொண்டபோது என்னை கையை பிடித்து கூட்டிகொண்டு சென்று பணியை பற்றி குழந்தைக்கு சொல்லிகொடுப்பதுபோல் அறிவுரை கூறி பணிக்கான இலக்கை நோக்கி அழைத்துசென்று பணி நிரந்தரம் பெற உதவிகள் செய்தார்.நான்கு வருட mansion வாழ்க்கை....எவ்வளவு அற்புதமான காலம்...
ஊரில் ஒரு தியேட்டரில் படம் மாத்திரகூடாது. ..அன்னைகே நைட் ஷோ செல்வோம்.மொக்கை படத்தையும் விடாமல் பார்த்துவிட்டு அடிப்பார்பாருங்க ஒரு கமெண்ட். ...இவனுன்ங்க படத்தை எடுத்துவிட்டு ரிலீஸ் பண்ணுறதுக்கு முந்தி ஒரு தடவை போட்டு பாக்க மாட்டாங்களா.
![]() |
தாதா கணேசன் ...பந்தாவை பாருங்க |
எத்தனை ஊர்களுக்கு சுற்றியிருக்கிறோம் ...எவ்வளவு பேசியிருக்கிறோம் ..
1995 க்கு பிறகு இட மாறுதல் பெற்று ராமேஸ்வரம் சென்று விட்டாலும் இன்றும் நினைத்தவுடன் போனில் பேச்சும் அடிக்கடி சந்திப்பும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
எழுதுவதற்கு நிறைய இருக்கிறது....மீண்டும் நிறைய பதிவுகளில் இவரை பற்றி எழுதவேண்டியுள்ளது.
இன்றைக்கு பதிவு வெளியிட வேண்டிய அவசியம் ..எது ?
இன்றைக்கு இவரது பணியிலிருந்து ஒய்வு பெறும் நாள்.......நண்பர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் சங்கமிக்கிறோம்...எங்களது நட்புக்கு ஒய்வு இல்லை.
No comments:
Post a Comment