தனஞ்செயன்
இந்த வருடத்தின் இரண்டாவது ஒய்வு பிரிவு உபசார விழா. .நான் அருப்புகோட்டைக்கு வந்து சரியாக 20 வருடங்கள் ஆகின்றன.1991 ம் வருடம் நவம்பர் 26 ம் தேதி நான் அருப்புகோட்டையில் LIC அலுவலகத்தில் join பண்ணுவதற்காக பஸ்ஸை விட்டு இறங்கி அலுவலகம் சென்ற வுடன் கிடைத்த முதல் அறிமுகம்.புதிதாக கிளை துவங்கப்பட்டதால் அலுவலக ஊழியர்களே மிக குறைவுதான். அறிமுகம் ஆனதும் நமக்கு பக்கத்துக்கு ஊர்க்காரர் நெல்லை மாவட்டம் முக்கூடல் என்றதும் வெளியூர் பயம் நீங்கியது.
எந்த ஒரு ஊரிலும் நாம் கால் மிதித்தவுடன் நம் உடனடி தேவை தங்குமிடம்தான்.வெளிநாட்டுக்கு செல்லும்போது விசா கிடைக்க கேட்கப்படும் கேள்வியே நீங்கள் எங்கு தங்குவீர்கள் ? என்பதுதான்.அருப்புகோட்டையில் இறங்கிய 15 வது நிமிடத்தில் என்னையும் நண்பர் கணேசன் sir யும் அகம்படியர் மாளிகை என்ற பிரதான இடத்தில் உள்ள mansion ல் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.இந்த 20 வருட வாழ்க்கைக்கு அடிப்படையான friendship base ம் எனது பணிக்கு தேவையான இன்சூரன்ஸ் வணிக தொடர்பும் ஏராளமாக கிடைத்த இடம் அதுதான். எனது அருப்புகோட்டை வாழ்க்கையில் சரியான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர்.
சினிமா ,இலக்கியம்,அரசியல் ,நாட்டு நடப்பு ,மனிதர்கள், கலாச்சாரம் என்று எல்லா தளத்திலும் போதிய விஷயங்களும், விவாதிக்கும் திறனும் உள்ளவர்.எப்போதும் கையில் புத்தகம் இருக்கும்.குறிப்பாக ஆங்கில நாவல்கள். உயர்நிலை கல்விமட்டும் தான் என்றாலும் ஆங்கில புலமை அவர் அளவுக்கு எனது அலுவலகத்தில் யாருக்கும் இல்லை என்பதே உண்மை.அவருடன் நிறைய ஊர் சுற்றியிருக்கிறேன். கிண்டல் ,கேலிக்கு அளவே இருக்காது.
இன்றுடன் அவருக்கு பணி நிறைவு. எனது நண்பர்கள் முத்துகுமரன் ,செல்வராஜ்., சிவகுமார் மூவரும் அவரது அழைப்பின் பேரில் வந்திருந்து சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள் . தனஞ்செயன் குடும்பத்தாரும் ,அவரது முகவர்களும் வந்து வாழ்த்தி மகிழ்வித்தனர்.கல்குறிச்சி முகவர் முத்துகிருஷ்ணன் sslc தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்து புலம்பியபோது ஆறுதல் சொல்லி ஊக்கபடுத்தி என்னை தேர்ச்சி பெற செய்து இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறார் என்ற கண்ணீர் மல்க கூறி காலில் விழுந்து ஆசி பெற்றது தனஞ்செயனுக்கு மட்டும் அல்ல எனது வளர்ச்சி அதிகாரி பணிக்கு கிடைத்த மகுடம் .
அவர் ஒய்வு பெறுவதற்கு இரண்டு வருடம் முன்பே இரண்டு மகள் மற்றும் மகனுக்கு திருமணம்,சொந்த வீடு என்ற எல்லா commitment யும் முடித்தவர்.எப்போதும் கிண்டலுடன் கூடிய பேச்சும்,மகிழ்ச்சியான மனோபாவத்துடன் இருப்பவர்.அதற்கான காரணத்தை தனது பேச்சில் எதையும் என்னிடம் எதிர்பாக்காத மனைவியும் ,பிக்கல் புடுங்கல் இல்லாத எனது குழந்தைகளும் தான் எனது மனநிறைவுக்கு காரணம் என கூறியது அனைவரையும் மனம் நெகிழ வைத்தது.
31.12.2011
No comments:
Post a Comment