அந்த பள்ளியில் படித்ததை தவிர எனது திறமைகளை ( ? ) வளர்த்து கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. காலையில் பள்ளிக்கு முதலில் யார் வருவது என்ற போட்டி இரண்டு மூன்று பேரிடம் இருக்கும். நான் முதலில் பள்ளிக்கு சென்று விட்டால் அடுத்தவர் வரும் வரை தனியாக இருக்க எனக்கு பயமாக இருக்கும்.
எனது வகுப்பு தோழர்கள் சேதுராமன், பூமிநாதன், மனகாவலம், ராசமணி, ஜான் போஸ்கோ பீட்டர், சிலோன் நடராஜன், பாலையா, முருகேசன், ராமசாமி, ...... ...... ...... ......
இவர்கள் நினைவுக்கு வருபவர்கள்
ராமசாமியை ஊருக்கு செல்லும்போது பார்ப்பேன். மாடு பத்திக்கொண்டு செல்வான். காரில் செல்லும்போதும் நிறுத்திப் பேசுவேன். "என்ன அசோக்கு எப்படி இருக்கே?" என்று வாஞ்சையுடன் கேட்பான். பாலையாவும் (ஒருமுறை அவன் பொங்கல் வாழ்த்து தபால் பெட்டியில் போட்டுவிட்டு போனவுடன் நானும் கணேசனும் பெட்டிக்குள் குச்சி விட்டு எடுத்துப் பார்த்தோம். முகவரியில் முருகன் மாமா என்று எழுதியிருந்தான்) பார்த்தால் குழந்தைகளைப் பற்றி விசாரிப்பான்.
'இப்போது எங்கள் வாழ்க்கையில் தான் என்னே வித்தியாசம்! எங்கே வேறுபட்டோம்?' என்று யோசிப்பேன். நாம் கரைசேர்ந்து விட்டோம் என்ற லேசான கர்வமும் அவர்கள் மீதான பரிவும் எழும் .
இவர்களில் மூவரைத் தவிர மற்ற எல்லோரையும் பார்த்து 30 வருடங்களுக்கு
மேலாகிறது.சந்திக்க வேண்டும் என்ற ஆவலும் நம்பிக்கையும் மனதில் இருக்கிறது.
Old friends are Gold.
New friends are Diamond!
If you get a Diamond,
Don’t forget the Gold!
Because to hold a Diamond, you always
Need a base of Gold